நயன்தாரா-விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு இசையமைத்தவர் அனிருத். இப்படத்திற்கு பிறகு நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஜெயம் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை ஜெயம் ராஜா விறுவிறுப்பாக செய்துவருகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை அனிருத் நாளை வெளியிடப்போவதாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அனிருத் இசையமைப்பில் ‘ரெமோ’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன்-ஜெயம் ராஜா இணையவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் ‘ரெமோ’ படம் வெளியான பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில், இப்படம் குறித்து மேலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்புக்காக நாளை வரை காத்திருக்கவும்.
Tags:
Cinema
,
அனிருத்
,
சர்ச்சை
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
நயன்தாரா
,
விஜய் சேதுபதி