இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி இந்த ஆண்டு தென்னிந்திய திரைப்பட விழாவை பிரமாண்டமாக நடத்துகிறது. நாளை ஐதராபாத்தில் தொடங்கும் இந்த விழா இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். நான்கு மொழிகளில் இருந்தும் சிறந்த படங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.
இந்த விழாவின் நடுவர்கள் விருதுக்கு வந்துள்ள படங்களை பார்த்து தேர்வு செய்துள்ளனர். திரைப்படவிழா வட்டார தகவல்களின்படி ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் பாகுபலி படம் அதிக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விழாவில் பிரபுதேவா, தேவிஸ்ரீ பிரசாத், பரத், சிவராஜ்குமார், ராம்சரண் தேஜா, ஜீவா, அகில் அக்னினேனி, தமன்னா, ஸ்ரேயா, டாப்ஸி, பிரியாமணி, ஆகியோர் நடனமாடுகிறார்கள். சாதனை கலைஞர்கள் கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், வாசுதேவன் நாயர், சித்தலிங்கையா கவுரவிக்கப்படுகிறார்கள்.
Tags:
Cinema
,
Thani Oruvan Movie
,
அரவிந்த்சாமி
,
சினிமா
,
தனி ஒருவன்
,
நயன்தாரா
,
ஜெயம்ரவி