நயன்தாரா ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து இருமகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்பட படப்பிடிப்பை மலேசியாவில் முடித்துவிட்டு நயன்தாரா நாடு திரும்பும் போது விமான நிலையத்தில் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டதாக பரபரப்பாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து பேசிய இருமுகன் படக்குழுவினர், மலேஷியாவின் இரண்டு பன்னாட்டு விமான முனையங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை. வழக்கமாக இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் “கே.எல்.1” முனையம் மூலம் பயணிப்பர்.
ஆனால் புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ “கே.எல்.2” முனையம் மூலம் இயங்குகிறது. அம்முனையத்தில் குடியேற்ற அதிகாரிகள், நயன்தாராவின் உதவியாளர்களிடம் அவர்களுக்கான பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரைப்பதிவுக்கான சில விளக்கங்களை கேட்டுள்ளனர். பிற்பாடு நயன்தாராவே அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதோடு, அவரும், அவரது உதவியாளர்களும் இந்தியாவுக்கு எவ்வித இடையூறுமில்லாமல் பயணித்துள்ளனர்.
நயன்தாரா பாஸ்போர்ட் புகைப்படம் வெளியானது குறித்து மலேஷிய காவல்துறையில் புகார் ஒன்றை “இருமுகன்” படக்குழுவினர் அளித்துள்ளனர்.
Tags:
Cinema
,
Malaysia
,
இருமகன்
,
சினிமா
,
நயன்தாரா
,
விக்ரம்