அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘இளையதளபதி’ விஜய்க்கு இருக்கும் ரசிகர் படையை மனதில்கொண்டு இப்படத்தை உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் தெறி வெளியாகி ஒருவாரம் கழித்து தெலுங்கு ஸ்டார் பவன் கல்யாணின் சர்தார் கப்பர் சிங் படமும் வெளிவரவுள்ளது. விஜய்யை போலவே பவன் கல்யாணுக்கும் உலகம் முழுவதும் மார்கெட் உண்டு. எனவே இது தெறி படத்தின் வசூலில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்றொரு கேள்வி தற்போது எழுந்துள்ளது.
Tags:
Cinema
,
அட்லி
,
சினிமா
,
தெறி
,
பவன் கல்யாண்
,
விஜய்