ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள பெங்களுர் நாட்கள் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இதில் தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசி நடித்துள்ள நடிகை ஸ்ரீ திவ்யாவின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இதனால் உணர்ச்சிவசப்பட்ட நடிகை ஸ்ரீதிவ்யா, தன்னை பாராட்டி வாழ்த்திய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இனி எல்லா படங்களுக்கும் சொந்தக்குரலில் டப்பிங் பேச முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
ஆர்யா
,
சினிமா
,
பாபி சிம்ஹா
,
ராணா
,
ஸ்ரீதிவ்யா