சில நாட்களுக்கு முன்பு நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் “நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில இருக்கிற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும்னு எழுதியிருந்தா அதை யாராலும் மாற்ற முடியாது” என்றொரு சர்ச்சையான ட்வீட்டை தட்டியிருந்தார்.
இது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அவர், ” நான் நடித்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் வரும் வசனம் தான் அது. அதில் நான் யாரையும் குறிப்பிட்டு ட்விட் செய்யவில்லை. மற்றவர்கள் இதை வேறு மாதிரி பார்த்தால் நான் எப்படி அதற்கு பொறுப்பேற்க முடியும்” என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
Twitter
,
சித்தார்த்
,
சினிமா
,
தீயா வேலை செய்யணும் குமாரு