பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ‘அட்டகத்தி’ தினேஷ், ஆனந்தி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம் விசாரணை. வெளியீட்டுக்கு முன்பே சர்வேதச அளவில் பல அங்கீகாரங்களை பெற்ற இப்படம் நாளை பிப்ரவரி 5-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை மணிரத்னம், கமல் ஹாசன், பிரியதர்ஷன் போன்ற பல ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தும் இணைந்துள்ளார். டிவிட்டரில் இப்படம் குறித்து பேசிய அவர், ” விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இது வரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம்.வாழ்த்துக்கள் வெற்றிமாறன் – தனுஷ்” என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
ஆடுகளம்
,
சினிமா
,
தனுஷ்
,
பொல்லாதவன்
,
ரஜினி