ரஜினி தற்போது ‘கபாலி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக மலேசியா சென்றுள்ளார். இருப்பினும், அவர் நடித்துக் கொண்டிருக்கும் மற்றொரு படமான ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பும் மறுபுறம் சென்னையில் நடைபெற்று வருகிறது.
‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன், அக்ஷய்குமார் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தில் எமி ஜாக்சன் ஒரு ரோபோவாக நடிப்பதாக ஏற்கெனவே செய்தி வெளிவந்தது. ஆனால், இப்போது ரோபோ தயாரிக்கும் ரஜினிக்கு உதவியாளராக நடிக்கிறாராம்.
இதன் படப்பிடிப்பு தற்போது சென்னைக்கு அருகே உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
Tags:
Cinema
,
Enthiran 2
,
எந்திரன் 2
,
எமி ஜாக்சன்
,
கபாலி
,
சினிமா
,
ரஜினி