விஷால் நடித்த ‘கதகளி’ பொங்கல் முதல் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வசனங்கள் உள்ளன. அது தொடர்பான காட்சியை நீக்க வேண்டும் என்று கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் கே.பி.மணி பாபா என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.
மேலும் பல சிறுபான்மையினர் அமைப்புகளும், பிறர் மனம் புண்படும் படியாக இருக்கும் அந்த வாகனங்களை நீக்க வேண்டும் என்று விஷாலிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று தணிக்கை அதிகாரிகளின் ஒப்புதலுடன் அந்த வசனம் அமைந்துள்ள காட்சியை நீக்க விஷால் தானாகவே முன்வந்து முயற்சி மேற்கொண்டார்.
இதனால், கதகளி படத்தில் வில்லன் விஷாலுடன் பேசுவதாக வரும் 20 நொடி வசன காட்சி நீக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக விஷாலின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:
Cinema
,
Kathakali
,
Vishal
,
கதகளி
,
சினிமா
,
விஷால்