என்னை விடவும் சிறப்பாக நடிக்கக்கூடியவர் ரித்திகா – மாதவன் புகழாரம்..!!

1:05 AM |
சுதா இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற படம் இறுதிச்சுற்று. இப்படத்தில் நடித்ததற்காக நாயகி ரித்திகா சிங்கிற்கு தேசிய விருது கூட கிடைத்தது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் ரித்திகா சிங் குறித்து பேசிய மாதவன், ” ரித்திகாவுக்கு நடிப்பு மிக யதார்த்தமாக வரும். இறுதிச்சுற்று படத்தில் அவர் பல காட்சிகளில் என்னை விடவும் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்” என்றார்.
மேலும் வாசிக்க…

இறுதிச்சுற்று ஒரு மோசடிப் படம் – வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்..!!

8:31 PM |
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படம் விமர்சனரீதியாக கொண்டாடப்பட்டது.
ஒரு பெண் இயக்குனர் துணிச்சலாக பாக்ஸிங் துறையில் உள்ள பாலியல் அத்துமீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார், கச்சிதமான திரைக்கதை என்று பாராட்டப்பட்டது.

இறுதிச்சுற்று படத்தை தெலுங்கிலும் சுதா இயக்குகிறார். வெங்கடேஷ் நடிக்க ரித்திகா சிங் தமிழில் செய்த அதே வேடத்தை தெலுங்கிலும் செய்கிறார். ரித்திகா சிங் உண்மையில் ஒரு பாக்ஸர் என்பதும் இறுதிச்சுற்றுக்கு கூடுதல் பலமாக அமைந்தது.

உண்மையில் இறுதிச்சுற்று படத்தின் கதை கற்பனை அல்ல. சுதா தனது கற்பனையில் எழுதியதும் அல்ல. அது தமிழகத்தைச் சேர்ந்த துளசி ஹெலன் என்ற பெண்ணின் கதை. இவர் பல போட்டிகளில் ரித்திகா சிங்கையே தோற்கடித்துள்ளார்.

விளையாட்டுதுறையில் நிலவும் பாலியல் சுரண்டலை கேள்விகேட்டதால் பல போட்டிகளில் இவர் கலந்து கொள்ள முடியாமல் போனதுடன், இன்னும் வெளிச்சத்துக்கு வராமல் உள்ளார்.

துளசி ஹெலனின் அக்கா சரஸ்வதி. சுருக்கமாக சரஸ். அவருக்கு காவல்துறையில் சேர வேண்டும் என்று விருப்பம். அதற்காக பாக்சிங் கற்று கொள்கிறார். அவரைப் பார்த்து தங்கை துளசி ஹெலனுக்கும் பாக்சிங்கில் ஆர்வம் வருகிறது. 12 வயதலேயே பாக்சிங்கிற்கு தன்னை அர்ப்பணிக்கிறார்.
இறுதிச்சுற்று படத்தில் வருவது போலவே போட்டிக்கு முன்னால், துளசியின் அக்கா துளிசிக்கு காயத்தை ஏற்படுத்திவிடுகிறார். ஆனாலும், துளசி அந்தப் போட்டியில் வெற்றி பெறுகிறார்.

இறுதிச்சுற்று படத்தை எடுக்கும் முன் சுதா துளசியை சந்தித்து அவரது கதையை கேட்டுள்ளார். பிறகு அதே கதையை ரித்திகா சிங்கை வைத்து எடுத்துள்ளார்.

உண்மையில் ரித்திகா சிங்கை பல போட்டிகளில் தோற்கடித்த துளசியின் கதையிது. படத்தைப் பார்த்த பின் சுதாவிடம் துளசி இது குறித்து பேசிய போது, நீ சொன்ன கதையைப் போல் 100 பேர் சொல்றாங்க என்றிருக்கிறார்.
ஒரு பாக்சரின் கதையை சுட்டு இவர்கள் கோடிகளில் சம்பாதித்ததுடன் பெயரும் சம்பாதித்துவிட்டனர். ஆனால், நிஜ பாக்சர் இன்னும் அதே வறுமையில்தான் இருக்கிறார். அவரது கதாபாத்திரத்தில் நடித்த ரித்திகா சிங் சேம்பியனாகிவிட்டார்.

இறுதிச்சுற்று விளையாட்டுத்துறையில் நடக்கும் மோசடிகளையும், பாலியல் அத்துமீறல்களையும் சொல்லும் படம். அதை படமாக்கிய சுதாவும் அதே மோசடியைத்தான் செய்திருக்கிறார் என்பது கசப்பான உண்மை.
மேலும் வாசிக்க…

இவர் தான் ரியல் ரித்திகா சிங், மறைக்கப்பட்ட இறுதிச்சுற்று கதை..!!

1:38 AM |
இந்தியாவில் கிரிக்கெட் என்ற விளையாட்டை தவிர வேறு எந்த விளையாட்டும் அரசாங்கத்தின் கண்களுக்கு தெரியாது. ஹாக்கி, ஃபுட் பால், வாலி பால் என பல விளையாட்டுக்கள் இந்தியாவில் பல நகரங்களில் தூங்கிக்கொண்டே தான் இருக்கின்றது.

அதிலும் பாக்ஸிங் என்ற ஒரு விளையாட்டே விஜய், ஜெயம் ரவி சினிமாவில் காட்டிய பிறகு தான் நமக்கே தெரிந்திருக்கும், ஆனால், உண்மையான பாக்ஸிங் என்பது அது இல்லை, சினிமாவை தாண்டி ஓரளவிற்கு நேர்மையாக எடுத்த பாக்ஸிங் படம் தான் இறுதிச்சுற்று.

இப்படத்திற்காக இயக்குனர் சுதா இந்தியாவில் உள்ள பல பெண் பாக்ஸர்களை சந்தித்ததாக தெரிவித்தனர். ஆனால், உண்மையாகவே இது முழுக்க முழுக்க தமிழகத்தை சார்ந்த துளசி ஹெலன் என்பவரின் கதை தானாம், இதை அவரே நம்மிடம் தெரிவித்தார்.

துளசியின் அக்கா சரஸ்வதி ( எ ) சரஸிற்கு சிறுவயதிலிருந்தே பாக்ஸிங்கில் பெரிய ஈடுபாடு. இவரின் பாக்ஸிங்கை கண்டு வளர்ந்த காரணத்தால் துளசிக்கும் பாக்ஸிங் மீது அதிக ஆர்வம்.

ஆனால், சரஸிற்கு போலீஸ் ஆகவேண்டும் என்பதே லட்சியம், பாக்ஸிங் என்ன தான் கனவாக இருந்தாலும், குடும்ப வறுமை அவரை இந்த முடிவிற்கு இழுத்து சென்றது. ஆனால், யார் என்ன சொன்னால் என்ன? நானே ராஜா நானே மந்திரி என்று தோரணையில் துளசி 12 வயதில் தன் க்ளௌவ்ஸை(Gloves) அணிய இன்றும் நாக் அவுட் கேர்ளாக வலம் வருகிறார்.

என்னடா இதெல்லாம் சமீபத்தில் பார்த்த ஏதோ படம் போல் தெரிகிறதே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆம், இறுதிச்சுற்று படமே தான், இப்படத்தை சுதா இயக்குவதற்கு முன் முதன் முதலாக துளசியை தான் சந்தித்தாராம். அவரிடம் பல விஷயங்களை கேட்டு அறிந்துக்கொண்டு அதை ஒரு கதையாக வடிவமைத்தாராம்.

துளசிக்கு எதற்கு கேட்கிறார் என்று கூட ஆரம்பத்தில் தெரியவில்லை, ஏதோ படம் எடுக்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்துள்ளது. பின் திரையரங்கில் தன் நண்பர்களுடன் படம் பார்க்கையில் அனைவருக்கும் அதிர்ச்சி. துளசி மற்றும் அவருடைய நண்பர்கள் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே தான் இருந்தார்களாம் திரையரங்கில்.இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தன் தங்கை வளர்ச்சி பிடிக்காமல் லக்ஸ் கையை உடைப்பார் அல்லவா? அதேபோல் சரஸ், துளசியின் மூக்கை பதம் பார்த்துள்ளார்.

ஆனால், அப்படியும் அந்த போட்டியில் துளசி வென்றுள்ளார்.இதை விட அதிர்ச்சியான செய்தி என்ன தெரியுமா, துளசியின் தந்தை சமீபத்தில் கிறிஸ்த்துவ மதத்திற்கு மாறியுள்ளார். படம் வெளிவந்த பிறகு இதுப்பற்றி இயக்குனர் சுதாவிடம் துளசி முறையிட்டபோது, நான் உன்னை போல் 100 பேரை சந்தித்தேன். அவர்களும் இதையே தான் கூறினார்கள் என்று சிம்பிளாக கூறிவிட்டாராம்.அவர் 100 பேரை பார்த்துயிருக்கலாம், பேசியிருக்கலாம்,

சரஸ்வதியை சரஸ் என்று அழைப்பது போல், லட்சுமியை படத்தில் லக்ஸ் என்று தான் அழைப்பார்கள். இத்தனை ஒற்றுமை துளசியின் வாழ்வியலுடன் இறுதிச்சுற்று ஒற்றுப்போகையில் இதை சம்மதிக்க ஏன் சுதாவிற்கு மனம் வரவில்லை? மேலும், முதன் முறையாக பாக்ஸிங்கில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைக்காக புகார் கொடுத்து, பலரின் சூழ்ச்சியால் இவரால் தன் பாக்ஸிங் க்ளௌவ்ஸை இன்றும் அணிய முடியவில்லை.(பல முன்னணி போட்டிகளில் துளசியை பங்கேற்க தடை விதித்துவிட்டனர்).

துளசியின் வாழ்க்கையை வைத்து கோடி கோடியாக சம்பாதித்து விட்டார்கள், மேடி இஸ் பேக், தமிழ் சினிமாவிற்கு ஒரு சென்சேஷ்னல் ஹீரோயின் கிடைத்து விட்டார். ஆனால், 12 வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஒரு பெண்ணாக போராடி இந்திய அளவில் நடந்த பாக்ஸிங் போட்டிகளில் 3முறை வெண்கலம் வென்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த துளசி தற்போதும் ரூ 10 ஆயிரம், ரூ 15 ஆயிரம் சம்பளத்திற்கு நாள் முழுவதும் ஃபிட்நஸ் ட்ரைனராக ஒரு ஜிம்மில் கஷ்டப்படுகிறார்.

இத்தனையும் கூறி கடைசியாக அவர் கூறிய வார்த்தை ’என்ன இருக்கட்டும், பாக்ஸிங்கில் இத்தனை கொடுமை பெண்களுக்கு இருக்கின்றது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சுதா மேடம் அவர்களுக்கு சல்யூட்’ என்றார். ரித்திகா சிங்கை தலையில் தூக்கி கொண்டாடும் தமிழக இளைஞர்கள், படக்குழுவினர்கள், திரைப்பிரபலங்கள் இந்த ரியல் ரித்திகா சிங்கையும் கொஞ்சம் கவனிப்பார்களா? நாம் இந்த துளசி ஹெலனுக்கு ஒரு சல்யூட் அடிப்போம்.

மேலும் வாசிக்க…

விஜய்சேதுபதியின் எல்லா படங்களையும் பார்க்க விரும்புகிறேன். பிரபல நடிகை..!!

11:16 PM |
சுதா இயக்கத்தில் மாதவனுடன் 'இறுதிச்சுற்று' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ரித்திகாசிங், தற்போது 'காக்கா முட்டை' பட இயக்குனர் மணிகண்டன் இயக்கும் அடுத்தபடமான 'ஆண்டவன் கட்டளை' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியது குறித்து ரித்திகாசிங் கூறியபோது, 'நானும் எனது தந்தையும் மும்பையில் இருந்து அதிகாலை 4.30 க்கு கிளம்பி சென்னை வந்து மணிகண்டனை நேரில் சந்தித்து கதை கேட்டோம். அவர் கதை கூறிய விதமும், எனது கேரக்டரும் மிக அருமையாக இருந்தது. உடனே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அன்று இரவே மும்பை திரும்பினோம். இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியமான நாள் ஆகும்.

மேலும் விஜய்சேதுபதி குறித்து நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அவரை முதன்முதலில் சந்திக்கும் முன்னர் அவர் நடித்த அனைத்து படங்களையும் பார்க்க விரும்புகிறேன். அவர் நடித்த படங்களின் லிஸ்ட்டை தற்போது எடுத்துள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.


மேலும் வாசிக்க…

இறுதிச்சுற்று க்ளைமாக்ஸ் நேரத்தில் நடந்த நெகிழ்ச்சிக் கதை..!!

8:58 PM |
மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி வசூல் மற்றும் பாராட்டு மழையில் நனைந்திருக்கும் படம் இறுதிச்சுற்று. சுதா என்ற பெண் இயக்குநர் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் தெறி ஹிட். அதற்கு காரணம் ரித்திகா சிங்கின் க்யூட் நடிப்பே.

ரித்திகாவின் சின்சியரான நடிப்பே இந்தப் படத்திற்கு கூடுதல் பலம். அதற்கு சான்றாக ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் புகைப்படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது, “ இறுதிச்சுற்று கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியின் போது எடுக்கப்பட்ட படம். என் கண்ணின் மேல் காயம் போல் மேக்கப் செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தாய் போல இருந்து என்னைப் பார்த்துக்கொண்டவர் தான் ப்ரியா” என்று நெகிழ்ந்திருக்கிறார் ரித்திகா.

இவரை இறுதிச்சுற்று படத்தில் சில காட்சிகளில் பார்த்திருக்கலாம். சில நாட்கள் அவருடன் இருந்தாலும் அந்த நாட்கள் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்” என்று குறிப்பிட்டுள்ளார்”.

ரித்திகா பதிவிட்டுள்ள இந்தப் புகைப்படம் இறுதிச்சுற்று படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை விட நெகிழ்ச்சியாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்டுகளில் கருத்தை தெரிவித்துவருகின்றனர்.
மேலும் வாசிக்க…

இனி மாதவன் அங்கு போக கூடாது- இறுதிச்சுற்று பார்த்த பிறகு மணிரத்னம் கோரிக்கை

11:44 PM |
சுதா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இப்படத்தை பார்த்த மணிரத்னம், தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த சுதா தற்போது தனக்கென ஒரு தனித்துவத்தை பெற்று விட்டார் என கூறினார்.

இது மட்டுமின்றி மாதவன் இனி மாதவன் தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்,(மாதவன் 4 வருடங்களாக தமிழில் நடிக்காமல் வட இந்திய படங்களில் கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது).

மேலும், ரித்திகாவின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்தது, முதல் படம் போன்றே தெரியவில்லை, இப்படக்குழுவினர்கள் அனைவரும் உடனே அடுத்த படத்தை தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com