மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி வசூல் மற்றும் பாராட்டு மழையில் நனைந்திருக்கும் படம் இறுதிச்சுற்று. சுதா என்ற பெண் இயக்குநர் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் தெறி ஹிட். அதற்கு காரணம் ரித்திகா சிங்கின் க்யூட் நடிப்பே.
ரித்திகாவின் சின்சியரான நடிப்பே இந்தப் படத்திற்கு கூடுதல் பலம். அதற்கு சான்றாக ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் புகைப்படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது, “ இறுதிச்சுற்று கிளைமேக்ஸ் சண்டைக் காட்சியின் போது எடுக்கப்பட்ட படம். என் கண்ணின் மேல் காயம் போல் மேக்கப் செய்யப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் தாய் போல இருந்து என்னைப் பார்த்துக்கொண்டவர் தான் ப்ரியா” என்று நெகிழ்ந்திருக்கிறார் ரித்திகா.
இவரை இறுதிச்சுற்று படத்தில் சில காட்சிகளில் பார்த்திருக்கலாம். சில நாட்கள் அவருடன் இருந்தாலும் அந்த நாட்கள் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்” என்று குறிப்பிட்டுள்ளார்”.
ரித்திகா பதிவிட்டுள்ள இந்தப் புகைப்படம் இறுதிச்சுற்று படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை விட நெகிழ்ச்சியாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்டுகளில் கருத்தை தெரிவித்துவருகின்றனர்.
Tags:
Cinema
,
இறுதிச்சுற்று
,
சினிமா
,
சுதா
,
மாதவன்
,
ரித்திகா சிங்