நடிகர் விஜய் சேதுபதி இப்போது, தர்மதுரை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை சீனுராமசாமி டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு தேனியில் நடைபெறுகிறது. போலீஸ் நிலையம் முன்பு ரவுடிகளுடன் விஜய் சேதுபதி மோதுவது போல் ஒரு சண்டை காட்சியை படமாக்கினார்கள்.ஸ்டண்ட் நடிகர் ஒருவர் விஜய் சேதுபதியை ஓங்கி குத்துவது போல் நடித்தபோது, விஜய் சேதுபதியின் இடது கண்ணில் நிஜமாகவே குத்து விழுந்தது.
விஜய் சேதுபதி வலி தாங்காமல் அலறினார். அவருடைய இடது கண் முழுவதும் சிவப்பாக மாறியது. கண் வீங்க ஆரம்பித்தது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள்.அவருக்கு டாக்டர்கள் அவசர சிகிச்சை அளித்து தூங்க வைத்தார்கள். தூங்கி விழித்த பிறகும் கண்ணில் பயங்கர வலி இருப்பதாக விஜய் சேதுபதி கூறியதால் அவரை மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து போனார்கள்.
அங்கு அவருடைய கண் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் அவருடைய கண் நரம்பில் வீக்கம் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள்.சிகிச்சைக்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால், தர்மதுரை படப்பிடிப்பு அன்று ரத்து செய்யப்பட்டது. மறுநாள் சிகிச்சை முடிந்து விஜய் சேதுபதி வீங்கிய கண்ணுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.
Tags:
Cinema
,
Vijay Sethupathi
,
சினிமா
,
தர்மதுரை
,
விஜய் சேதுபதி