பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தெலுங்கு தமிழ் என இரு மொழிகளிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார் சித்தார்த். தற்போது இவர் நடிப்பில் அரண்மனை2 படம் ஜனவரி 29ல் வெளியாகவிருக்கிறது.
சமீபத்தில் மழை , வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை , கடலூர் பகுதிகளில் தனது முழுமையான பங்களிப்பைக் கொடுத்து ரியல் ஹீரோவாக பலராலும் பாராட்டப்பாட்டார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து பதிலளித்துள்ளார்.சித்தார்த்தின் நண்பர்கள் அவருக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டும் என விரும்புகிறார்களே எனக் கேட்க, கல்யாணம் மட்டும் எப்போ நடக்கணும்னு இருக்கோ அப்போதான் நடக்கும் என்பதை நம்புகிறவன் நான். கட்டாயப்படுத்தி நடப்பதல்ல.
மேலும் எந்த முறைக்கும் எதிரானவன் அல்ல நான். அது நடக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக நடக்கும்.காதல் குறித்து பேசுகையில், காதலைப் பொருத்தமட்டில் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என சொல்லமாட்டேன். எனக்கு இப்போது அந்த அதிர்ஷ்டம் இல்லை என்று தான் சொல்வேன் எனக் கூறியுள்ளார்.
Tags:
cinmea
,
Sidharth
,
அரண்மனை2
,
சித்தார்த்
,
சினிமா
,
பாய்ஸ்