நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும்-நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்ததாக கோலிவுட்டில் பரவலாக செய்தி பரவி வந்தது. அந்த படப்பிடிப்பின்போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதையெல்லாம் உறுதிப்படுத்தும் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொண்டு வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் திடீரென கும்பகோணம் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்துள்ளனர்.
இருவரும் கோவிலுக்கு சென்றது பல்வேறு தரப்பிலும் வெவ்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இருவரும் எதற்காக கும்பகோணம் கோவிலுக்கு சென்றார்கள் என்று விசாரிக்கையில், விக்னேஷ் சிவன் தற்போது சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் நல்ல வெற்றியை பெற இருவரும் சேர்ந்து கும்பகோணம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக ஒரு செய்தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
Tags:
Cinema
,
சினிமா
,
சூர்யா
,
நயன்தாரா
,
நானும் ரவுடிதான்
,
விக்னேஷ் சிவன்
,
ஜோடி