நடிகை அமலா பால் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்தது மட்டும் அல்ல அவர் அணிந்த உடைகளும் விவாகரத்திற்கு வழிவகுத்துள்ளதாக பேசப்படுகிறது.
கேரளாவில் இருந்து கோலிவுட் வந்த அமலா பாலுக்கு மைனா படம் கை கொடுத்தது. இதையடுத்து அவர் இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான இரண்டே ஆண்டுகளில் அவர்கள் பிரிந்துவிட்டனர்.
நடிப்பு
திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்று விஜய் போட்ட கன்டிஷனை அமலா பால் மீறியதால் தான் தற்போது விவாகரத்து வரை வந்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடை
விஜய்யும், அமலா பாலும் பிரிய மற்றொரு காரணமும் உள்ளது என்று கூறப்படுகிறது. அதாவது திருமணத்திற்கு பிறகு அமலா பால் குட்டி குட்டியாக ஆடை அணிந்தது விஜய் மற்றும் அவரது குடும்பத்தாரை முகம் சுளிக்க வைத்ததாம்.
பார்ட்டி
அமலா அரைகுறை ஆடை அணிந்து பார்ட்டிகளுக்கு சென்று ஆட்டம் போடுவதை பார்த்த அவரின் மாமனார், மாமியார் வேதனை அடைந்ததாக முன்பே செய்திகள் வெளியாகின.
எரியும் நெருப்பில் எண்ணெய்
ஏற்கனவே அமலா அரைகுறை ஆடை அணிவது பிடிக்காமல் இருந்த விஜய்க்கு அவர் தொடர்ந்து நடித்து வருவது மேலும் கோபத்தை ஏற்படுத்தியதாம்.
Tags:
Cinema
,
அமலா பால்
,
உடை
,
சினிமா
,
நடிப்பு
,
பார்ட்டி
,
மைனா
,
விஜய்