இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த ரித்திகா சிங் தேசிய விருது பட்டியலில் ஸ்பெஷல் மென்ஷனாகியுள்ளார். இதுக்குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட ரித்திகா ‘இது எனக்கு ஆஸ்கர் கிடைத்தது போல் உள்ளது’ என கூறியுள்ளார்.
உங்களுக்கு எந்த மொழியில் நடிக்க விருப்பம் என கேட்டபோது, ‘எனக்கு இந்தி தான் நன்றாக தெரியும், தமிழ் தற்போது தான் கற்று வருகிறேன். இதனால், இந்தி படத்தில் நடிக்கவே விருப்பம்’ என கூறியுள்ளார். ரித்திகாவின் பதில் பிரம்மாண்ட வரவேற்புகள் கொடுத்த தமிழ் ரசிகர்களுக்குக் கொஞ்சம் வருத்தமான விஷயமாகவே மாறியுள்ளது.
தமிழில் விஜய் சேதுபதி யின் ஆண்டவன் கட்டளை படத்தில் நடிக்க இருக்கும் ரித்திகா சிங் இந்தியில் ரன்வீர் சிங்குடன் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். மேலும் அலியா பட்டின் என்ர்ஜியான நடிப்பு மிகவும் பிடிக்கும் எனவும் பதிவு செய்துள்ளார்.
Tags:
Cinema
,
ஆண்டவன் கட்டளை
,
இறுதிச்சுற்று
,
சினிமா
,
ரித்திகா சிங்
,
விஜய் சேதுபதி