சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் தேர்ச்சி பெற்ற பிரபல பின்னணி பாடகி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
மலையாள திரை உலகில் பிரபல இசையமைப்பாளரான ஜான்சன் மாஸ்டர் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு காலமானார். இவரது மகளான ஷான் (வயது 31) திருமணம் ஆகி கணவரை பிரிந்து சென்னை அசோக் நகரில் வசித்து வந்தார்.
மயிலாப்பூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து வந்தார். தமிழில் எங்கேயும் எப்போதும் மற்றும் பறவை ஆகிய படங்களில் ஷான் பாடியுள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு தன்னுடைய உறவினர்களிடம் ஷான் செல்போனில் நன்றாக பேசியுள்ளார். இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குள் உறங்க சென்ற அவர், நேற்று மாலை நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை திறந்து பார்த்த போது, ஷான் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
உடல் முழுவதும் கருப்பு நிறமாக மாறி இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், அவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Cinema
,
எங்கேயும் எப்போதும்
,
சினிமா
,
பறவை
,
ஜான்சன் மாஸ்டர்
,
ஷான்