பாஸ்கர் இயக்கத்தில் கோபி சுந்தர் இசையில் ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, பார்வதி, ராய் லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ள பெங்களூர் நாட்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய நடிகை ஸ்ரீ திவ்யா படக்குழுவினர் அனைவரது பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். பின்னர் பேசவந்த ஆர்யா, ” இன்று ஒரு அதிசயம் நடந்துள்ளது. ஸ்ரீ திவ்யாவால் இவ்வளவு பேச முடியுமா என்பது எனக்கு இன்றுதான் தெரியவந்துள்ளது.
விழாவுக்குள் அவர் நுழைந்ததும் கோபி சுந்தர் யார் என்று பாபி சிம்ஹாவிடம் கேட்டார். பின்னர் மேடையேறி பேசியபோது கோபி சுந்தருடன் பல காலம் பழகியது போல் அவரை புகழ்ந்து தள்ளினார். அவர் இவ்வளவு நேரம் பேசியதில் எனக்கு மகிழ்ச்சி” என்றார்.
Tags:
ARYA
,
Cinema
,
ஆர்யா
,
சினிமா
,
பெங்களூர் நாட்கள்
,
ஸ்ரீதிவ்யா