வழக்குகளில் முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இதன் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்குகள் அனைத்தும் ஜாமீனில் வரக்கூடிய பிரிவு என்பதால் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தை அணுகத் தேவையில்லை.
முன்ஜாமீன் தேவை எனில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தையே அணுகலாம். கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் நாளைக்குப் பதிலாக வருகிற 11-ம் தேதி ஆஜராகவேண்டும் போன்ற உத்தரவுகளை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை தி.நகரில் இன்று மாலை சிம்புவின் தந்தை டி.ரஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: என் மகனின் வாழ்க்கையில் திருப்பமான நாள் இன்று. அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படாத பீப் பாடலை தேவையில்லாமல் பூதாகரமாக்கிவிட்டார்கள்.
பீப் பாடல் எந்த திரைப்படத்திலும் இடம் பெறவில்லை. யாரோ ஒருவர் அந்தப்பாடலை திருடி, சிம்புவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர். வேண்டாம் என ஒதுக்கிய பாடலை வலைதளத்தில் வெளியிட்டவர் மீது நடவடிக்கை தேவை. -எங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை நீதிபதியிடம் எடுத்து உரைத்தோம்.
அதன்படி இந்த வழக்கில் இன்று எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்து தர்மம் வென்றது. எங்களுக்கு ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, குறிப்பாக இறைவனுக்கு நன்றி இவ்வாறு அவர் பேசினார்.
Tags:
Cinema
,
சிம்பு
,
சினிமா
,
பீப் பாடல் சர்ச்சையில் இருந்து சிம்பு விடுதலை