சிம்புவுடன் தீடீர் நெருக்கம் காட்டி விஷாலை சீண்டிய வரலட்சுமி..!!

10:46 PM |
நடிகர் விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே காதல் இருந்ததாகவும், தனது தந்தை சரத்குமாரிடம் விஷால் முறைப்பு காட்டியதால், அந்த காதலுக்கு வரலட்சுமி முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் தமிழ் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் வெற்றி விழாவை, அப்படத்தின் நாயகன் சிம்பு ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினர். இதில் த்ரிஷா, வரலட்சுமி, ரம்யா கிருஷ்ணன், ஏ.ஆர்.ரகுமான், படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, திரிஷா, சிம்பு, வரலட்சுமி ஆகியோர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்தனர். முக்கியமாக, சிம்புவும் வரலட்சுமியும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிம்புவும், வரலட்சுமியும் ‘போடா போடி’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.

சிம்புவிற்கும், விஷாலுக்கு ஆகவே ஆகாது. விஷாலிடம் இருந்து வரலட்சுமி விலகிய நிலையில், சிம்புவிடம் அவர் நெருக்கம் காட்டி வருவது, விஷால்  தரப்பிற்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

தனது மேனேஜர் மூலம் 7 ஆண்டு கால காதலை முறித்துள்ளார் வரலட்சுமி..!!

11:22 PM |
நடிகர் விஷாலும், சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் காதலர்கள் என்பதும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதும் கோடம்பாக்கம் அறிந்த விஷயம். இருப்பினும் விஷாலுக்கும், சரத்குமாருக்கும் நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு பிரச்சினை வெடித்தது. அப்போது விஷாலுக்கு ஆதரவாக வரலட்சுமி இருந்தார்.

ஆனால் சமீபத்தில் சரத்குமாருக்கு ஆதரவாக வரலட்சுமி மாறியதாகவும், விஷாலுடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்டதாகவும் செய்தி பரவியது.

இந்நிலையில் வரலட்சுமி தனது ட்விட்டர் பதிவில் ’’காதல் முறிவுகள் தரம் தாழ்ந்துள்ளன..ஒரு ஆண் தனது மேனேஜர் மூலம் 7 ஆண்டு கால காதலை முறித்துள்ளார்…காதல் எங்கே? என பதிவிட்டுள்ளார். இதனால் விஷாலுடன் அவருக்குள்ள 7 ஆண்டு காதலில் பிரச்சினை என்று கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வருகிறது.
மேலும் வாசிக்க…

நடிகர் சங்கத்தில் சரத்குமார் நீக்கிய விவகாரம் - விஷாலை திட்டி தீர்த்த வரலட்சுமி..!!

1:14 AM |
ஆடு பகை, குட்டி உறவு என்பார்கள். அது போல சரத்குமார், ராதிகா இடையே மோதலில் இருக்கும் விஷால் அவர்களது மகளும் நடிகையுமான வரலட்சுமியை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருக்கும் விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை அதிரடியாக நீக்கினார்.

இதனை அறிந்த திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. சரத்குமாரின் மனைவி ராதிகா டுவிட்டரில் விஷாலை சூனியக்காரன் என திட்டி தீர்த்தார். சரத்குமாரோ இதனால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

இதனையெல்லாம் கூர்ந்து கவனித்த வரலட்சுமி தந்தையின் வருத்தத்தை பார்க்க முடியாமல் தவித்ததாக பேசப்பட்டது. இதனால் கோபமடைந்து விஷாலை திட்டியதாக சமூக வலைதளங்களில் நேற்று செய்திகள் பரவியது.

என் அப்பாவை சீண்டாதே தாங்க மாட்டே என வரலட்சுமி விஷாலிடம் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

விஷால் - வரலக்ஷ்மி திருமணம் விரைவில்..!!

11:21 PM |
நடிகை வரலட்சுமியுடன் தான் இணைந்து இருக்கும் புகைப்படத்தை, 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள நடிகர் விஷால், 'இந்தப்படமே அனைத்தையும் சொல்லும்' என, கூறியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், முன்னாள் தலைவர் சரத்குமார் அணியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் விஷால்.

தாய் பகையானாலும் குட்டி உறவு என்பது போல், சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமியை, விஷால் காதலிப்பதாக கூறப்பட்டது. இதற்கு, இருதரப்பிலும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

மாறாக, பொது நிகழ்ச்சிகளுக்கு இருவரும் சேர்ந்தே சென்று வந்தனர். 'டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், இருவரும் இணைந்த புகைப்படங்களை, அவ்வப்போது வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், விஷாலும், வரலட்சுமியும் விரைவில் திருமணம் செய்யப்போவதாக பரவிய தகவலை தொடர்ந்து, நடிகர் விஷால், 'டுவிட்டரில்' நேற்று, வரலட்சுமி மற்றும் செல்ல நாயுடன் இணைந்து இருக்கும் படத்தை வெளியிட்டு, 'இது எல்லாவற்றையும் சொல்லும்' என, தகவல் வெளியிட்டு உள்ளார்.

விஷாலின் பதிவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி, நடிகர், நடிகையரும் வாழ்த்து சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

'தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில், 2018ல் கட்டி முடிக்கப்படும் திருமண மண்டபத்தில் நடைபெறும் முதல் திருமணம், விஷால் - வரலட்சுமி ஜோடியாக இருக்கலாம்' என, 'கோலிவுட்' எனப்படும் சென்னை, கோடம்பாக்கம் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.
மேலும் வாசிக்க…

பரபரப்பை கிளப்பும் விஷால்-வரலட்சுமி ஃபோட்டோ..!!

12:56 AM |
விஷால், வரலட்சுமி இருவரும் நீண்ட நாளாகவே நட்புடன் பழகிவருகிறார்கள். இருவரையும் சேர்த்து பல கிசுகிசுக்கள் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில் விஷால் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷால் தன்னுடைய ட்விட்டர் கணக்கில், வரலட்சுமியுடன் சேர்ந்து எடுத்த செல்ஃபி ஒன்றை வெளியிட்டு, “இந்தப் புகைப்படம் எல்லாமே சொல்லும்” என்று ட்விட்டியிருக்கிறார். இந்தப் புகைப்படத்தையும், ட்விட்டையும் பார்த்த சக நடிகர்களும், ரசிகர்களும் விஷால், வரலட்சுமியை திருமணம் செய்யப்போகிறார் என்று நினைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதற்கு விஷால் தரப்பிலிருந்தோ, வரலட்சுமி தரப்பிலிருந்தோ எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை. தவிர, என்னுடைய வாழ்வில் ஒரு லட்சுமி இருக்கிறார் என்று முன்னர் விழா ஒன்றில் விஷால் பேசியதும் நினைவுக்கூரத்தக்கது.

விஷால், வரலட்சுமி நடிப்பில் சுந்தர்.சி இயக்கிய “மதகஜராஜா” வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, ரிலீஸூக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 


மேலும் வாசிக்க…

மாஸ் ஹீரோ இப்படி செய்யலாமா? விஷாலை கிண்டல் செய்த வரலட்சுமி..!!

11:51 PM |
விஷால், வரலட்சுமி இருவருமே நல்ல நண்பர்கள். தாரை தப்பட்டை படம் பார்த்துவிட்டு வரலட்சுமியை மனம் திறந்து பாராட்டினார் விஷால்.

அதேபோல் தற்போது மருது படத்தை பார்த்த வரலட்சுமி ‘மருது படம் சூப்பர் ஹிட், ஆனால் ஒரு மாஸ் ஹீரோ செய்வதை நீங்களே பாருங்கள்’ என டுவிட் செய்தார்.

இதில் விஷால் குழந்தைகள் வரையும் பொம்மை படங்களில் கலர் செய்து கொண்டிருந்தார். இதோ உங்களுக்காக வரலட்சுமி டுவிட்...

மேலும் வாசிக்க…

விஷால் -வரலட்சுமி திருமணம் விரைவில் அதிரடி அறிவிப்பு..!!

1:22 AM |
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டி முடித்த உடன் அங்குள்ள மண்டபத்தில் முதல் திருமணம் என்னுடையதுதான் நடைபெறும் என்றும் நடிகர் விஷால் கூறியுள்ளார். தன்னுடையது காதல் திருமணம்தான் என்றும் லட்சுமிகரமான பெயர்கொண்டவர்தான் தனக்கு மனைவியாக வருவார் என்றும் விஷால் கூறியுள்ளார்.

சென்னையில் நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டுகின்றனர். இதற்காக நட்சத்திர கிரிக்கெட் வரும் 17ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான முன்னோட்டமாக சன் டிவியில் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகிறது. நட்சத்திர சங்கமம், நடிகர்கள் சந்திப்பு என பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

இந்த வாரம் டப்மாஷ் செய்து நட்சத்திரங்கள் அசத்தினர். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வருமாறு கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திரங்களை பட்டு சேலை, பட்டுவேட்டி கொடுத்து தமிழக நடிகர்கள் அழைப்பு விடுக்கின்றனர். கன்னட நடிகர் யாஷ், நடிகர் விஷாலிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வியை முன் வைத்தார்.

அதற்கு விஷால், நான் 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறினார். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டி முடித்த பின்னர், அதில் உள்ள திருமண மண்டபத்தில் தன்னுடைய திருமணம் நடைபெறும் என்று கூறினார். உடனே அருகில் இருந்த நடிகை ரேகா, இது காதல் திருமணமா என்று கேட்க, ஆமாம், நான் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன் என்றார்.

உடனே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சங்கீதா, காதல் மனைவியின் பெயரை சொல்லுங்களேன் என்று கூற, லட்சுமிகரமான பெயர் கொண்டவர்தான் தனக்கு மனைவியாக வருவார் என்று விஷால் கூறினார். விஷாலின் இந்த அறிவிப்புக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற நட்சத்திரங்கள் அனைவரும் கரஒலி எழுப்ப, நடிகர் சிவகுமார், ஒரு வித்தியாசமான ரியாக்சன் கொடுத்தாரே பார்க்கலாம் அதுதான் ஹைலைட்.
மேலும் வாசிக்க…

ஒரே அணியில் விஷால் வரலட்சுமி - களைகட்டும் நட்சத்திர கிரிக்கெட்..!!

1:58 AM |
நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரு பக்கம் ஆதரவுகளும், மறுபக்கம் எதிர்ப்புகளும் குவிந்துகொண்டே இருப்பினும், சங்கம் தன் கடமையை நிறைவேற்றும் பாணியில் டீம் கேப்டன்கள் மற்றும் டீம் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆண்களும், பெண்களும் இணைந்து விளையாடும் கிரிக்கெட் போட்டியாக இந்த நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியின் டீம்கள் அமைந்துள்ளன. நடிகர் சங்க கிரிக்கெட் அணியில் இடம்பெறவிருக்கும் வீரர்,வீராங்கனைகளின் பட்டியல் இதோ

சென்னை சிங்கம்ஸ்:

கேப்டன் - சூர்யா

அணி வீரர்கள்: விக்ராந்த், நந்தா, உதய், அருண் விஜய், அர்ஜுன், ஹன்சிகா, கீர்த்தி சாவ்லா, கெளரி முங்கல், திவ்யா, ருக்மினி.

மதுரை காளைஸ்:

கேப்டன் - விஷால்

அணி வீரர்கள்: ரிஷி, சூரி, அருள்நிதி, ரமணா, ஆர்.கே. சுரேஷ், மன்சூர் அலிகான், ❣வரலட்சுமி, ஜனனி ஐயர், மதுமிதா, சாந்தினி, நிக்கி கல்ராணி

கோவை கிங்ஸ்:

கேப்டன் - கார்த்தி

அணி வீரர்கள்: பிரசாந்த், பரத், விஷ்ணு, சஞ்சய், மகேந்திரன், ஜே.கே. ரித்தீஷ், தமன்னா, மது ஷாலினி, ஸ்ருஷ்டி டாங்கே, மிஷா, அபிநயஸ்ரீ.

 நெல்லை டிராகன்ஸ்:

கேப்டன் - ஜெயம் ரவி

அணி வீரர்கள்: அரவிந்த் சாமி, விஜய் வசந்த், செளந்தர்ராஜா, பிரித்வி, அஸ்வின் சேகர், வைபவ், ஸ்ரீ திவ்யா, நமிதா, மனிஷா யாதவ், விஜயலட்சுமி, கோமல் சர்மா, பார்வதி.

ராம்நாடு ரைனோஸ்:

கேப்டன் - விஜய் சேதுபதி

அணி வீரர்கள்: ஜெய், கலை, போஸ் வெங்கட், வருண் ஈஸ்வரி கணேஷ், சக்தி, சிரிஷ், அருண் பாலாஜி, ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால், வசுந்தரா, காயத்ரி, ரித்விகா.

தஞ்சை வாரியர்ஸ்:

கேப்டன் - ஜீவா

அணி வீரர்கள்: அதர்வா, லக்‌ஷ்மண், பசுபதி, சரண், அசோக், பிளாக் பாண்டி, அமலா பால், தன்சிகா, நிகிஷா படேல், பிளோரா ஷைனி, சஞ்சனா சிங்

சேலம் சீட்டாஸ்:

கேப்டன் - ஆர்யா

அணி வீரர்கள்: கார்த்திக் முத்துராமன், உதயநிதி ஸ்டாலின், ஆதவ், உதயா, ஜித்தன் ரமேஷ், செந்தில், பிந்து மாதவி, நந்திதா, பூணம் கெளர், ரகசியா, சுஜா

திருச்சி டைகர்ஸ்:

கேப்டன் - சிவகார்த்திகேயன்

அணி வீரர்கள்: விக்ரம் பிரபு, அசோக் செல்வன், ஷாம், ஹேமசந்திரன், நிதின் சத்யா, சதீஷ், ஸ்ரீமன், கீர்த்தி சுரேஷ், சாயா சிங், காயத்ரி ரகுராம், தேஜாஸ்ரீ, வேதிகா
மேலும் வாசிக்க…

இணையத்தில் வைரல் ஆகும் விஷாலின் வருங்கால மனைவி வரலட்சுமியின் வீடியோ..!!

1:53 AM |
மேலும் வாசிக்க…

என்ன… ஒங்களுக்கு இதே வேலயா போச்சா? வரலட்சுமி எரிச்சல்..!!

10:47 PM |
சேது அபிதாவில் ஆரம்பித்து, பரதேசி வேதிகா வரைக்கும் பாலா படத்தில் ஹீரோயினாக நடித்தவர்களுக்கெல்லாம் என்ன வருமோ, அதுதான் வரலட்சுமிக்கும்! உள்ளதும் போச்சே நொள்ளக் கண்ணியாகி வெவ்வேறு லாங்குவேஜுக்கு போயாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று ஓடிவிடுவார்கள். ஆனால் அந்த கொடுப்பினையும் வரலட்சுமிக்கு இல்லை என்கிறது வரலாறு!

மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் இவர் நடிக்கிறார் என்பதையே பெரிய செய்தியாக்கி வருகிறார்கள் சிலர். ஆனால் திலிப், துல்கர் சல்மான் என்று ஆசைப்படுகிற மனசுக்கு அது எவ்வளவு கொடுமையான சித்ரவதை என்பது நமக்கெங்கே தெரியும்? போகட்டும்… இப்போதும் அதே கேரளாவிலிருந்துதான் ஒரு மூட்டை எரிச்சலை வரலட்சுமிக்கு பார்சலாக அனுப்பி வைத்திருக்கிறார்கள் சேட்டன்கள்.

என்னவாம்?

கேரள முதல்வர் உம்மான் சாண்டியின் உறக்கத்தை கெடுத்து, அங்குள்ள இன்னும் சில மந்திரிகளின் ராத் தூக்கத்துக்கு சங்கு ஊதி, ஏகப்பட்ட அட்ராசிட்டி பண்ணிவரும் சரிதா நாயர் கதை தெரிந்தால் மேற்கொண்டு இந்த செய்தியை படிக்கலாம். இந்த சரிதா நாயர்தான் மேற்படி மந்திரிகள் மீதும், சபலிஸ்டுகள் மீதும், பாலியல் குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்திருக்கிறார்.

சரிதா நாயரின் ஓங்குதாங்கான உடல் கட்டுக்கு சரியாக பொருந்தி வருபவர் வரலட்சுமிதான் என்பதை ‘தாரை தப்பட்டை’ பார்த்து உறுதி செய்து கொண்ட கேரள இயக்குனர் ஒருவர், “சரிதா நாயர் கதையை படமா எடுக்குறேன். நீங்கதான் அந்த கேரக்டர்ல நடிக்கணும்” என்கிறாராம். அவருக்கு வரலட்சுமி சொன்ன பதில்தான் இந்த செய்தியின் தலைப்பு.

பாலா படத்தில் நடிச்சா வாழ்க்கையையே புரட்டிப் போட்ருவாருன்னு சொன்னாங்களே, அது இதுதானா கேரளா காம்ரேட்ஸ்?
மேலும் வாசிக்க…

விஷால்-வரலட்சுமிக்கு விடிவுகாலம் பிறந்தது..!!

1:01 AM |
நடிகர் சங்க தேர்தல் வெற்றிக்கு பிறகு பல அதிரடி முடிவுகளை விஷால் எடுத்து வருகிறார். இந்நிலையில் கிட்டத்தட்ட 3 வருடங்களாக இவருடைய நடிப்பில் கிடப்பில் இருந்த படம் மதகஜராஜா.

பல தேதிகள் அறிவிக்கப்பட்டு ரிலிஸாகமால் தள்ளிப்போனது, இப்படத்தில் ஹீரோயினாக வரலட்சுமி நடித்திருந்தார்.

சமீபத்தில் வந்த தகவலின்படி அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு இப்படம் மார்ச் 11ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க…

அய்யோ பாவம்… வரலட்சுமிக்கு கிடைத்த ஆறுதல் பரிசு..!!

10:52 PM |
சினிமாவில் வெற்றியடைய திறமை உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அதிர்ஷ்டமும் வேண்டும் என்று சொல்வார்கள். இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ… நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு பொருந்தும்.

நடிகர் சரத்குமாரின் மகளாக இருந்தும் இன்னமும் அவரால் முதலிடத்தைப் பிடிக்க முடியவில்லை.வரலட்சுமி கதாநாயகியாக நடித்த முதல் படம் போடா போடி.

சிம்புவுக்கு ஜோடியாக அந்தப் படத்தில் நடித்தார்.வருடக்கணக்கில் முடங்கிக் கிடந்த போடா போடி படம் ஒருவழியாக திரைக்கு வந்தது. ஆனால் ஒன்றிரண்டு நாட்கள் கூட ஓடவில்லை.

அப்படத்தின் தோல்வி காரணமாக வரலட்சுமியின் அறிமுகம் புவானமாகிப்போனது.அதன் பிறகு விஷாலுக்கு ஜோடியாக மத கஜ ராஜா என்ற படத்தில் நடித்தார்.

சுந்தர்.சி. இயக்கிய இந்தப் படம் முடிவடைந்து ரிலீஸ் ஆகும் நேரத்தில் கடன் பிரச்சனை காரணமாக அப்படத்தின் தயாரிப்பாளர் தற்கொலை செய்து கொண்டார்.சில வருடங்கள் கழித்து மத கஜ ராஜா படத்தை ரிலீஸ் செய்ய விஷால் முயற்சி செய்தார். கடைசிவரை முடியவில்லை.இதனால் வரலட்சுமியின் வாழ்க்கை மறுபடி கேள்விக்குறியானது.

இந்நிலையில்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமானார்.பாலா படத்தில நடிக்கிறார் என்ற தெரிந்ததும் வரலட்சுமியை புக் பண்ண பல இயக்குநர்கள் தேடி வந்தனர்.

என் படம் முடியும் வரை எந்தப்படத்திலும் நடிக்கக் கூடாது என்று கட்டளையிட்டார் பாலா.அதனால் தேடி வந்த படங்களை நிராகரித்தார் வரலட்சுமி.

தாரை தப்பட்டை படத்தை தன் வாழ்க்கை என்று நினைத்த வரலட்சுமி, அப்படம் வெளியான பிறகு உச்ச நட்நத்திரமாகிவிடுவோம் என்ற கற்பனையில் மிதந்தார்.

தாரை தப்பட்டை படத்தின் தோல்வி அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. அதனால் கடும் மன உளைச்சலில் இருந்த வரலட்சுமிக்கு ஆறுதலாக ஒரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.பிரசன்னா, அர்ஜூன் நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் வரலட்சுமி.
மேலும் வாசிக்க…

வரலட்சுமிக்கு ரஜினிகாந்த் பாராட்டு..!!

1:19 AM |
தாரை தப்பட்டை படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது. இளையராஜாவின் 1000மாவது படம் என்ற சிறப்புடன் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமையவில்லை. படத்திற்க கடும் விமர்சனங்கள் எழுந்து நிலையில் வசூல் ரீதியாக பொங்கல் படங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

பாலா, இளையராஜா, சசிகுமார் ஆகியோர் விமர்சகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டாலும் படத்தில் கதாநாயகியாக நடித்த வரலட்சுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஒரு கரகாட்டக் கலைஞராக அப்படியே வாழ்ந்து காட்டினார் என்ற பாராட்டு அவருக்கு அதிகமாகக் கிடைத்து வருகிறது. அவருடைய நடிப்பும், கிளாமரும்தான் படத்தைக் காப்பாற்றியது என்று வினியோகஸ்தர்களே தெரிவித்தார்கள்.

திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வரலட்சுமிக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது ரஜினிகாந்தும் வரலட்சுமியைப் பாராட்டியுள்ளார். இது குறித்து வரலட்சுமி, “ஓ மை காட், நான் இப்போது மிக மிக மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறேன். சூப்பர் ரஜினிகாந்த் தற்போதுதான் என்னுடன் தொலைபேசியில் பேசினார். உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி சார். மிகவும் அற்புதமாக உணர்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

பாலா என் துணியை கூட கிழித்துவிடுவார்- வரலட்சுமி ஓபன் டாக்

1:38 AM |
தாரை தப்பட்டை படத்தை பற்றி யார் என்ன சொன்னாலும், வரலட்சுமி நடிப்பை பற்றி யாராலும் பேச முடியாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இப்படத்தில் தன் அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார் இவர்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றி பேட்டியளித்த இவரிடம், படப்பிடிப்பில் பாலா எப்படி என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘நான் அவரிடம் இந்த கதாபாத்திரத்திற்காக ஏதும் பயிற்சி எடுக்க வேண்டுமா? என்று கேட்டேன், அவர் “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், படப்பிடிப்பிற்கு வா, நான் சொல்வதை செய்” என்பார்.

படப்பிடிப்பில் இருந்த ஒரு வருடமும் ஸ்பாட்டில் நான் கண்ணாடியே பார்க்கல. ரெடியாகி பாலா சார் முன்னால போய் நிற்போம் அவர்தான் முடியைக் கலைச்சுவிடுவார், மேக் அப் சரி பண்ணுவார், தேவைப்பட்டா துணியை கூட கிழித்துவிடுவார்’ என கூறினார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com