மயிரிழையில் உயிர் தப்பிய ஜி.வி.பிரகாஷ் RJ பாலாஜி..!!

3:19 AM |
ஜி.வி.பிரகாஷ் தற்போது ராஜேஷ் இயக்கி வரும் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகிகளாக அவீகா கோர் மற்றும் நிக்கி கல்ராணி நடித்து வருகிறார்கள். பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, பிரம்மானந்தம், ஆர்.ஜே.பாலாஜி. 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் காரில் செல்ல வில்லன்கள் துரத்துவது போன்ற காட்சியைப் படமாக்கி வந்தார்கள்.அப்போது கண்டெய்னர் லாரி மோதியதில் ஜி.வி.பிரகாஷ் சென்ற கார் நிலை தடுமாறி சாலைகளுக்கு இடையே இருக்கும் தடுப்புச் சுவர் மீது மோதியது.

இதில் ஆர்.ஜே.பாலாஜிக்கு மூக்கிலும், ஜி.வி.பிரகாஷிற்கு முகம் மற்றும் தோள்பட்டையிலும் அடிப்பட்டிருக்கிறது. விபத்தைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் பெரியளவிற்கு பாதிப்பு இல்லை என்றவுடன் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பி இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
மேலும் வாசிக்க…

களத்தில் இறங்கி வேலை - நிஜ ஹீரோக்களான சித்தார்த்-ஆர்.ஜே.பாலாஜி..!!

2:19 AM |
வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிதியுதவி அளித்துவிட்டு சும்மா இருக்கும் திரைபிரபலங்களுக்கு மத்தியில் நடிகர் சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவை வழங்கி உதவி வருகின்றனர்.

 சென்னையில் கொட்டி தீர்த்த பேய் மழையால் சென்னை நகரமே சின்னாபின்னமாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. உண்ண உணவு கூட இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் நடிகர் சித்தார்த்தின் வீட்டிற்குள்ளும் மழை நீர் புகுந்தது. ஆனாலும் அவர் அதைப்பற்றி கவலைப்படவில்லை டுவிட்டர் வாயிலாக அங்கே உதவி தேவை, இங்கு உதவி தேவை என்று பதிவிட்டு கொண்டே இருந்தார்.

 மேலும் உங்களால் உணவு அளிக்க முடியுமென்றால் என்னை அழையுங்கள். நாங்கள் உங்களிடம் வந்து உணவு பொட்டலங்களை பெற்று கொள்கிறோம். உணவு பொட்டலங்கள் தருபவர்கள், எங்களை #ChennaiMicroவில் தொடர்பு கொள்ளவும். வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டால், தயவு செய்து உதவி புரியுங்கள். அவர்களை தண்ணீர் இல்லாத இடத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிவாரணப் பணிகளில் ஈடுபடாதவர்கள் தயவு செய்து வீட்டுக்குள் இருந்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்.

வெறும் டுவிட்டரில் மட்டும் பதிவிட்டு அவர் சும்மா உட்காரவில்லை. நடிகர் சித்தார்த், ஆர்.ஜே.வும் நடிகருமான பாலாஜி அவரது நண்பர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து நேரடியாக வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் களம் இறங்கினார். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட பொருட்களை வழங்கி சென்றார்கள். மேலும் உதவி செய்பவர்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் உதவி செய்கிறோம் என்று இருவரும் கூறியிருக்கிறார்கள்.

உண்மையில் இருவருமே ரியல் ஹீரோக்கள் தான். இருவருக்கும் ஹேட்ஸ் ஆப்!
மேலும் வாசிக்க…
2015 Thediko.com