தென்னிந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது கலாபவன் மணியின் மரணம். இவர் இறப்பதற்கு முன் மது அருந்திருந்தார் என கூறப்பட்டது.
மேலும், அதில் மெத்தனால் இருந்ததாகவும் ஒரு செய்தி பரவியது. இதை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவும் ஒரு செய்தி நடிகர் சாபு தான் அவர் குடித்த மதுவில் ஏதோ கலந்துவிட்டார் என அந்த செய்தி உள்ளது.
இதை அறிந்த சாபு பதறியடித்துக்கொண்டு 'நான் கலாபவன் மணியை சந்தித்தது உண்மை தான், ஆனால், அங்கிருந்து 11 மணிக்கே சென்று விட்டேன், அவருடன் நான் மது அருந்தவே இல்லை, ஏன் இப்படி வதந்திகளை பரப்புகிறார்கள் என்று எனக்கே தெரியவில்லை' என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
கலாபவன் மணி
,
சாபு
,
சினிமா
,
நடிகர்
,
வதந்தி