சிம்புவின் பீப் பாடலுக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டே போகிறது. இந்நிலையில் சிம்புவை தண்டிக்கும் சட்டம் விஷாலை ஏன் தண்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகர் விஷால் தாழ்த்தப்பட்ட மக்களை கொச்சை படுத்தி பேசிய போது பாயாத வன்கொடுமை தடுப்புச்சட்டம் , தமிழ் சினிமா துறையில் தனக்கென்று ஒரு நற்பெயரை தமிழர் அடையாளத்தோடு வைத்திருக்கும் அண்ணன் டி.ஆர்.ராஜேந்திரன் மகனுக்கு மட்டும் ஏன் வன்கொடுமை தடுப்புச்சட்டம் வெறித்தனமாக பாய்கிறது. அவர் தமிழன் என்பதாலா?
ஒரு வேளை சிம்புவை கைது செய்தால், அவர் ஜாமீனில் வெளிவரும் போது தமிழர் முன்னேற்றப்படை சார்பாக அவருக்கு சிறை வாசலிலேயே வரவேற்பு கொடுப்பேன்.இன்று பெண்ணியத்திற்காக குரல் கொடுக்கும் மாதர் குல மாணிக்கங்களே பெண்கள் என்ற வரையரை இந்தியாவில் இருக்கும் பெண்களை மட்டும் தான் குறிக்குமா? ஈழத்தில் இல்லையா?
ஒரு வினாடியாவது கற்பை இழந்த பல்லாயிரம் பெண்களின் கதையை கேளுங்கள். கற்பை காக்க உயிர் தியாகம் செய்த பல்லாயிரம் பெண்களின் கதைகளை படியுங்கள். பெண்களின் கண்ணி யத்தை பாடல் வரிகள் மட்டும் பாதுகாக்க முடியாது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:
Cinema
,
சிம்புவை தண்டிக்கும் சட்டம்
,
சினிமா
,
விஷாலை ஏன் தண்டிக்கவில்லை