ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் ‘எந்திரன்2’ படத்தில் எமி ஜாக்சன் நடிக்கக் கூடாது என தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எமி ஜாக்சன் ஓரிரு நாட்களுக்கு முன்பு தமிழர்களின் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அதில் சோனாக்ஷி சின்ஹா, வித்யா பாலன் உள்ளிட்டோரும் அடக்கம் என்ற நிலையில் எமி ஜாக்சனுக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன.
தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் கி.வீரலட்சுமி இதுகுறித்து முகநூலில் தெரிவித்துள்ளதாவது,
நடிகர் ரஜினிகாந்துக்கும் இயக்குநர் சங்கருக்கும் தமிழர் முன்னேற்றப் படை 3 நாள் அவகாசம் தருகிறோம். அதற்குள் எந்திரன்-2 படத்தில் நடிக்கும் கதாநாயகி எமிஜாக்சனை படத்தில் இருந்து நீக்கியதாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் வரும் திங்கட்கிழமை அன்று தென்னிந்திய நடிகர் சங்கம் முற்றுகைப் போராட்டம், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் சங்கர் வீடு முற்றுகைப் போராட்டமாக மாறும்.
எந்திரன்-2 படப்பிடிப்பு இடத்தை எல்லாம் தமிழர்முன்னேற்றபடை ஆர்ப்பாட்டம் செய்யும் நடிகை எமிஜாக்சன் எந்திரன்-2 படப்பிடிப்பில் தமிழ்நாட்டில் இருந்துகொண்டே தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.அவரின் ட்விட்டர் பக்கத்திலும் அதை வலியுறுத்தியுள்ளார்.
எங்கள் தமிழ் மண்ணில் பிழைப்புக்காக வரும் நடிகர்,நடிகைகள் எல்லாம் பணம் சம்பாதித்தது போக எங்கள் பண்பாட்டிலும் மூக்கை நுழைப்பது இனி எங்கள் காலத்தில் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் என அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Cinema
,
சங்கர்
,
சினிமா
,
ரஜினி
,
ரஜினி வீடு முற்றுகை