சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு நடிகர் சித்தார்த் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் சித்தார்த், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் தன்னார்வலர்களுடன் சேர்ந்து உதவி வருகிறார்கள். மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவதுடன் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களை மீட்டும் உள்ளனர். இந்நிலையில் சித்தார்த் தன்னார்வலர்களுக்கு ஓர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தடுப்பூசி தன்னார்வலர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி ஊசி போட்டுக் கொள்ளுங்கள். திறந்தநிலையில் உள்ள காயங்கள் இருந்தால் கவனம். தோல் நோய் பரவும். பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
உணவு முக்கியம் அல்ல. வெள்ளநீர் வடிந்து கொண்டிருக்கிறது. இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. பெட்ஷீட்கள், மெழுகுவர்த்திகள், பூச்சிக்கொல்லிகள், தண்ணீரை நன்கொடை அளியுங்கள். என சித்தார்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:
Cinema
,
ஆர்.ஜே. பாலாஜி
,
சித்தார்த்
,
சித்தார்த் மக்களுக்கு அளித்த அறிவுரை
,
சினிமா