விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒன்றரை மாதமே இருக்கும் நிலையில் இளையதளபதி விஜய் திடீரென ஒரு அமைச்சருடன் மோதுகிறாராம். ஆனால் அந்த அமைச்சர் 'தெறி' படத்தின் கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம் 'தெறி' படத்தின் வில்லனாக நடிக்கும் இயக்குனர் மகேந்திரனுக்கு இந்த படத்தில் அமைச்சர் கேரக்டராம். அமைச்சர் மகேந்திரனுக்கும் போலீஸ் அதிகாரி விஜய்க்கும் இடையே நடைபெறும் மோதல்தான் படத்தின் மெயின் கதை என்று கூறப்படுகிறது.
ஒரு காட்சியில் அமைச்சராக இருக்கும் மகேந்திரன் சிகரெட்டை பற்ற வைத்து புகையை விஜய் முகத்தின் மீது ஊதும் காட்சி உள்ளதாம். விஜய்யும் அட்லியும் நிறைய புகையை ஊதுங்கள் என்று கூறியபோதிலும் மகேந்திரன் தயங்கினாராம். அதற்கு காரணம் கேட்டபோது, 'விஜய் என்ன பிரமாதமான எக்ஸ்பிரஷன் காமிச்சிட்டு இருக்கார்.
ஒருவேளை நான் ஊதும் புகை அவரது எக்ஸ்பிரஷனை மறைச்சிடுச்சுன்னா ஆடியன்ஸுக்குத் தெரியாமல் போயிடுமே என்ற பயம். என்ஜாய் பண்ண முடியாதே என்ற கவலையால் நான் அதிக புகையை ஊதவில்லை' என்று மகேந்திரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி
,
தெறி திரை விமர்சனம்