எங்கேயும் எப்போதும் படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் அஞ்சலி-ஜெய் குறித்து பல வதந்திகள் வந்தது. இருவரும் காதலிக்கிறார்கள், வெளியே ஊர் சுற்றுகிறார்கள் என செய்திகள் உலா வந்தது.
இந்நிலையில் புகழ் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஜெய்யிடம் இதுக்குறித்து கேட்ட போது, ‘அஞ்சலி தெலுங்கு சினிமாவிற்கு சென்ற பின் அவரை பார்த்தே 2 வருடங்கள் ஆகிவிட்டது.ஐந்து மாதங்களுக்கு முன், நானும் அஞ்சலியும் மீண்டும் சந்தித்துக் கொண்டோம்.
அப்போது எங்கள் ‘செல்போன்’ எண்களை பரிமாறி கொல்ல, அதை தொடர்ந்து சில பொது இடங்களுக்கு சென்று வந்தோம், தற்போது நட்பாக இருக்கும் நாங்கள் வரும் நாட்களில் காதலர்களாக மாறலாம்’ என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
அஞ்சலி
,
எங்கேயும் எப்போதும்
,
சினிமா
,
புகழ்
,
ஜெய்