அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விஜய் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை ஆரம்பத்திலே எடுத்து முடித்து விட்டனர்.
கடந்த மாதம் கோவிலில் எமிஜாக்சன் காட்சிகளை விஜய்யை வைத்து எடுத்து விட்டார் அட்லி. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னை அம்பத்தூரில் உள்ள Omega Industrialலில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். மேலும் படத்தின் இறுதி சண்டைகாட்சியை 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கலைஞர்களை வைத்து கொண்டு கிரேன், ஜிம்மி ஜிப்பி கருவிகளை பயன்படுத்தி 6 கேமராக்களில் பல கோணங்களில் எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக விஜய் கிரேனில் தொங்கியபடி சண்டை செய்து வருகிறாராம். இந்த சண்டை காட்சி படத்தில் பெரிய அளவில் பேசவேண்டும் என்று முனைப்புடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் அட்லி.
Tags:
Cinema
,
கிரேனில் தொங்கிய விஜய்
,
சினிமா
,
தெறி படத்தில் புதுமை