காதலரை கழட்டிவிட்ட நடிகை..!!

12:33 AM |
நயன நடிகை காதலித்து வருவதாக கூறப்படும் சிவமான இயக்குனர் தற்போது சூர்யாமானவரை வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ஜோடியாக நடிக்க தனது காதலியான நயன நடிகையை நடிக்கவைக்கலாம் என முடிவு செய்திருந்தாராம்.

தனது விருப்பத்தை காதலியிடமும் அவர் தெரிவித்தாராம். ஆனால், காதலியோ இவரது படத்தில் நடிக்க முடியாது என கைவிரித்துவிட்டாராம். இதனால், இயக்குனர் ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டாராம்.

காதலி கழட்டிவிட்ட நிலையில், தற்போது வேறொரு நடிகையை தேடி அலைந்து வருகிறாராம் இயக்குனர்.
மேலும் வாசிக்க…

தற்கொலை செய்து கொண்ட நடிகை கர்ப்பம் - அதிர்ச்சி தகவல் அம்பலம்..!!

12:17 AM |
மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா கடந்த 1-ந் திகதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும், அவரது காதலன் ராகுல் சிங்கும் தனிமையில் வசித்து வந்த நிலையில், திடீரென அவர் இந்த முடிவை தேடிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், ராகுல்சிங் கொடுத்த சித்ரவதை காரணமாக தான் பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் போலீசில் புகார் கொடுத்தார். இதனிடையே, இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்காக மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, ராகுல் சிங் முன்ஜாமீன் பெற்றார். அவரது முன்ஜாமீன் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தற்கொலை செய்து கொண்ட 24 வயது டி.வி. நடிகை பிரதியுஷா, கர்ப்பமாக இருந்த தகவல் வெளியாகி பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருப்பையில் மேற்கொண்ட சோதனையில் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் பிரதியுஷா தன்னுடைய வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்திருக்கிறார். இந்த தகவலை ஜே.ஜே. மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, பிரதியுஷா தற்கொலை வழக்கில் மறைந்து கிடக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் முன்னர், அவர் கர்ப்பமாக இருந்த தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வாசிக்க…

நடிகை பிரதியுஷாவின் காதலன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது..!!

2:13 AM |
மும்பையை சேர்ந்த டி.வி நடிகை பிரதியுஷா(வயது24). இந்தி தொடர்களில் நடித்து பிரபலமான இவர் கடந்த 1-ந் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலன் ராகுலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

சென்ற 3-ந் தேதி போலீசார் விசாரித்து கொண்டிருந்த போது, ராகுலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே, பிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி கொடுத்த புகாரின் பேரில் பங்கூர் போலீசார் ராகுல் சிங் மீது பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராகுல்சிங்கை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

அதன்பின்னர் ஆஸ்பத்திரிக்கு வந்த அவர் திடீரென ஆஸ்பத்திரி குளியலறை கதவை பூட்டிக் கொண்டார். அதன்பின்னர் அவர் வெகுநேரமாக வெளியே வரவில்லை. இதுபற்றி அவரது உறவினர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் குளியலறை கதவை தட்டி வெளியே வரும்படி அழைத்தனர்.

அப்போது அவர் குளியலறை வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார். இதை கேட்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது. மேலும் எந்த வித விபரீத முடிவும் எடுத்துவிடாதபடிக்கு அவருக்கு வெளியே இருந்தபடியே ஆலோசனை வழங்கி சமாதானம் செய்தனர். இதன்பின்னர் அவர் கதவை திறந்து வெளியே வந்தார்.

பின்னர் அவருக்கு டாக்டர்கள் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கி நேற்று முன்தினம் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com